தெலுங்குத் திரைப்பட நடிகர் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி, காட்பாதர் போன்ற படங்களில் நடித்துள்ள நயன்தாரா, தற்போது அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் அவரின் 157வது திரைப்படத்திலும் இணைந்திருக்கிறார்.

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் சிரஞ்சீவியின் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தின் முசோரியில் நடைபெற்று வருகிறது.
நேற்று முதல் நயன்தாரா, சிரஞ்சீவியுடன் இணைந்து தனது கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். அங்கு இருவரும் சேர்ந்து ஒரு பாடல் மற்றும் பல முக்கியமான காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர். முழுமையாக ஆக்ஷன் மயமான கதையில் உருவாகும் இந்தப் படம் 2026-ம் ஆண்டு சங்கராந்தி தவிழாவை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.