நயன்தாரா தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’, ‘டாக்சிக்’, ‘ராக்காயி’, ‘டியர் ஸ்டூடன்ட்ஸ்’ மற்றும் சிரஞ்சீவியின் 157வது படம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பணிபுரிந்து வருவதால், மிகுந்த பிஸியாக இருக்கிறார்.
இவ்வாறு பிசியாக இருந்தாலும், கிடைக்கும் நேரங்களில் தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பழக்கத்தை வழக்கமாக கடைபிடித்து வருகிறார் நயன்தாரா.
இந்நிலையில் தற்போது நயன்தாரா தனது குடும்பத்துடன் நெதர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். அந்த நாட்டின் பல பகுதிகளில் தனது மகன்களுடன் நடந்து பயணித்த போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.