கன்னட சினிமாவில் கே.ஜி.எப் 1 மற்றும் 2, காந்தாரா மற்றும் சலார் போன்ற பான் இந்தியா படங்களை தயாரித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற தயாரிப்பு நிறுவனமாக ஹோம்பாலே பிலிம்ஸ் திகழ்கிறது. இந்நிறுவனம் தற்போது ‘சலார் 2’ மற்றும் ‘கே.ஜி.எப் சாப்டர் 3’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடரச்செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த நிறுவனம் அடுத்ததாக பாலிவுட் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷனை வைத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பை ‘பிக் பேங் பிகின்ஸ்’ என டைட்டிலுடன் வெளியிட்டுள்ளது.
இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஹிந்தியில் தயாராகி, பான் இந்தியா திரைப்படமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இயக்குநர் யார் என்பதனை இதுவரை அறிவிக்கவில்லை. ஏற்கனவே ஹோம்பாலே நிறுவனம் பிரபாஸை வைத்து மூன்று படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.