Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ஊர் கூடி உறவை வாழ்த்துவதைப் போல, ‘பிரிவு’ முடிவையும் மதித்து அமைதிக்கு இடம் அளிக்க வேண்டும் – இயக்குனர் பார்த்திபன் ட்வீட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு, 29 ஆண்டுகள் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு பிரியப்போவதாக அறிவித்துள்ளனர். அவர்களின் பிரிவு திரையுலகத்திலும் ரசிகர்களிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அவர்களது பெயரை நேரடியாக குறிப்பிடாமல், ‘பிரிவு’ என்ற தலைப்பில் இயக்குநர் பார்த்திபன் இன்று காலை சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அது திரையுலகத்திலிருந்து வந்த முதல் ஆறுதல் கருத்தாக அமைந்துள்ளது.

அந்த பதிவில், “பிரிவு, இசை ஸ்வரங்கள் பிரிவதால் பிறக்கும் நாதம்தான் ‘குடைக்குள் மழை’ பாடலின் அடிப்படை. அதை நான் எழுதியதற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து, இசையே பாடியது. பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல, புதிய அமைதியாகவும் பிறக்கலாம். நெருக்கம் கொடுத்த சொர்க்கம் சில நேரங்களில் மூச்சு முட்டும் புழுக்கமாக மாறும். அப்படியென்றால், அந்த நிலையை மாற்றி, புதிய வாழ்க்கை தொடங்க முயல வேண்டும். ஊர் கூடி உறவை வாழ்த்துவதைப் போல, ‘பிரிவு’ முடிவையும் மதித்து அமைதிக்கு இடம் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News