அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியீட்டிற்காக பிஸியாக காத்திருக்கும் ஜெயம் ரவி, முதலில் ‘பிரதர்’ படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து, கிருத்திகா உதயநிதியின் ‘காதலிக்க நேரமில்லை’ படமும் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிகிறது.
இதே நேரத்தில், ஜெயம் ரவி அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் ‘ஜீனி’ என்ற படத்திலும் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த மூன்று படங்களும் அடுத்த ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்குள் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், டாடா பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டருடன் வெளியாகியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார்.