மிக அதிக எதிர்பார்ப்புகளோடு வெளியான திரைப்படங்களில் முக்கியமான ஒன்று தான் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘கேம் சேஞ்சர்’. ஆனால், இந்த படம் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படம் உலகளாவிய வெற்றியை பெற்ற பிறகு, ராம் சரண் நடித்த புதிய படம் என்பதால் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த படம் எதிர்நோக்கிய வெற்றியை பெறவில்லை என்பதால், தயாரிப்பாளருக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

சமீபத்திய ஒரு பேட்டியில் இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பின், ராம் சரணுக்கு வெற்றி அளிக்கும் படத்தை வழங்க முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்தார். மேலும், படத்தின் முடிவுகள் நம் கையில் இல்லை என்பதையும் அவர் கூறினார்.
மேலும் தான் ஒரு நட்சத்திர ஹீரோவை வைத்து பெரியளவில் தயாரிக்க உள்ள தனது அடுத்த படம் பற்றிய திட்டங்களைப் பகிர்ந்தார். அந்த படத்தை அடுத்த ஆண்டு தொடங்கி, 2027 அல்லது 2028-ஆம் ஆண்டு வெளியிடப்பட உள்ளது எனத் தெரிவித்தார். இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அந்த ஹீரோ அல்லு அர்ஜுன் ஆக இருக்கலாம் என திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.