Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ வரலாற்று உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறதா? வெளியான தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் “அமரன்”. இந்த படம், ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இதன் கதையில் அவரது வீரத்தையும், கடினமான வாழ்க்கை பாதையையும் பிரதிபலிக்கிறது.

தற்போது, இயக்குநர் சுதா கெங்கரா இயக்கும் “பராசக்தி” திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில், ரவி மோகன் வில்லனாகவும், ஸ்ரீலீலா கதாநாயகியாகவும், அதர்வா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த திரைப்படமும் ஒரு உண்மை சம்பவங்களை மையமாக கொண்ட கதையாக உருவாகியுள்ளது.

“பராசக்தி” திரைப்படத்தின் கதை 1965களில் நடைபெற்ற முக்கியமான வரலாற்று சம்பவங்களை மையமாகக் கொண்டது. 1965ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி, ஹிந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வுகளும், மதுரையில் ஹிந்தி மொழிக்கெதிராக போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினரால் நடத்தப்பட்ட தடியடிப் பிரச்சினைகளும் இதில் இடம்பெறுகின்றன.

அதேபோல், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களும், இந்த மொழிக்கொடியை எதிர்த்து பேரணி நடத்தினர். அந்த போராட்டத்தின் போது, காவல்துறையினர் தடியடி நடத்த, மாணவர் ராசேந்திரன் மீது துப்பாக்கி சூடு நிகழ்ந்தது. அவருடைய நெற்றியில் பாய்ந்த அந்தத் தாக்குதலால், அவர் உயிரிழந்தார்.1969ம் ஆண்டு, மாணவர் ராசேந்திரனின் தியாகத்தை நினைவுபடுத்தும் வகையில், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அவரது திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.இந்த வரலாற்று உண்மையை அடிப்படையாக வைத்து, இயக்குநர் சுதா கெங்கரா “பராசக்தி” படத்தை உருவாக்கி வருகிறார். இதில், சிவகார்த்திகேயன் ராசேந்திரன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதன் மூலம், “அமரன்” திரைப்படம் போன்று, “பராசக்தி” திரைப்படமும் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்ட வாழ்க்கை வரலாறு கதையாக உருவாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News