Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

சிவகார்த்திகேயன் அடுத்து புறநானூறு படத்தில் தான் நடிக்கிறாரா? வெளியான முக்கிய தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உருவெடுத்துள்ளார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அமரன்’ படத்தில் அவர் நடித்துள்ளார், இப்படம் வரும் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

இதே சமயத்தில், சிவகார்த்திகேயன் தனது 23வது படமாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதோடு, சிபி சக்கரவர்த்தி மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவருடைய அடுத்த படங்களில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘புறநானூறு’ படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்க இருந்தபோதும், சில காரணங்களுக்காக அவர் விலகியதின் பின்னர் சிவகார்த்திகேயன் இப்படத்தில் இணைந்துள்ளார். இத்திரைப்படம் இந்தி திணிப்பு தொடர்பான கதைக்களத்தில் உருவாக இருக்கின்றது என கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படம் 2026ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகும் என திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News