Thursday, October 3, 2024

டாடா பட இயக்குனரின் புதிய படத்தில் நடிக்கிறாரா ஜெயம் ரவி? அப்போது தனி ஒருவன் 2 நிலைமை?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த ஆண்டில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்த ‘டாடா’ திரைப்படம் வெளியானது. இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து, அவர் ஜீவா, துருவ் விக்ரம் போன்ற நடிகர்களை வைத்து புதிய படங்களை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கான முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், கணேஷ் கே பாபு அடுத்ததாக ஜெயம் ரவியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயம் ரவி தற்போது ‘பிரதர்’, ‘ஜீனி’, மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார், மேலும் இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்து, அவர் ‘தனி ஒருவன் 2’ படத்தில் நடிக்க உள்ளார் எனக் கூறப்பட்டது. ஆனால், ‘தனி ஒருவன் 2’க்கு முன்பே அவர் கணேஷ் கே பாபு படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது .

- Advertisement -

Read more

Local News