Monday, February 3, 2025

ராணா டகுபதி-ஐ இயக்குகிறாரா இயக்குனர் பி.எஸ்.மித்ரன்? வெளியான புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இரும்புத்திரை, ஹீரோ, சர்தார் ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது சர்தார் – 2 படத்தை இயக்கி வருகிறார் பி. எஸ். மித்ரன். இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

அவருடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாதன், சஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், மற்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் பிறகு, பாகுபலி படத்தின் வில்லன் ராணா நடித்துக் தயாரிக்கும் பான் இந்தியா படத்தை மித்ரன் இயக்கவுள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகிறது. இதற்காக ராணா தயாரிப்பிலும் ஈடுபட்டு நடிக்க உள்ளார். ஏற்கெனவே அவர் ஆரம்பம், பெங்களூரு நாட்கள், காடன், வேட்டையன் போன்ற பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News