‘சித்தா’ திரைப்பட வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘வீர தீர சூரன் 2’. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இப்படத்தின் முதல் பாகமும் விரைவில் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அருண் குமாரின் அடுத்த படம் என்ன என்பதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு புதிய படத்தை இயக்க இயக்குநர் அருண் குமார் ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புதிய படத்திற்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரை தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்தப் புதிய முயற்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.