நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த படம் ‘கல்கி 2898 எடி’ கடந்த ஆண்டு வெளியானது. இந்த படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது, இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு இந்த ஆண்டுக்குள் துவங்கும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து நாயகியான தீபிகா படுகோனே விலகக்கூடும் என பாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவுகின்றன. கடந்த வருடம் குழந்தை பிறந்த பிறகு, சினிமா வேலைகளில் தீபிகா ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஆறு முதல் எட்டு மணி நேரம் மட்டுமே பணிபுரிவேன் என ஒரு நிபந்தனை விதித்துள்ளாராம். இதே காரணத்தினால், அவர் முன்னதாக நடிக்கவிருந்த ‘ஸ்பிரிட்’ திரைப்படத்திலிருந்து பேச்சுவார்த்தையுடன் விலகினார். மேலும், இந்த விஷயத்தில் அவருக்கும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர் தனது நிலைப்பாட்டை மறைமுகமாக எக்ஸ் தளத்தில் பதிவிடும் அளவிற்கு விவகாரம் சென்றது.
தற்போது ‘கல்கி 2’ படக்குழுவும், தீபிகா விதித்துள்ள இந்த ஆறு முதல் எட்டு மணி நேர வேலை நேரக் கட்டுப்பாட்டை ஏற்க விரும்பவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், தற்போது அவருடைய கதாபாத்திரத்தை குறைக்கலாமா அல்லது முற்றிலும் நீக்கலாமா என குழுவினர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் தீபிகாவுக்கு பாலிவுட் பிரபலங்களிலிருந்து சிலர் ஆதரவு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.