Friday, October 4, 2024

சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிக்கிறாரா அதர்வா? புறநானூறு படம் குறித்து வெளியான நியூ அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது மட்டுமல்லாமல், பல பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. அதன் தொடர்ச்சியாக, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா மீண்டும் ‘புறநானூறு’ படத்தில் இணைவார் என்ற தகவல் வெளியானது. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் என கூறப்பட்டது.  

எனினும், கால்ஷீட் பிரச்சினையின் காரணமாக சூர்யா ‘புறநானூறு’ படத்தில் இணைவது கேள்விக்குறியாகியது. அதனால், சுதா கொங்கரா சூர்யாவுக்கு பதிலாக வேறு நடிகரை தேர்வு செய்ய முடிவெடுத்தார். அப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படம் ஸ்ரீலீலாவுக்கு தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முதல் படம், மேலும் இரண்டு பிரபலங்களும் இதில் இணைவதாக செய்திகள் வந்துள்ளன. அதன்படி, அதர்வா, சிவகார்த்திகேயனின் தம்பியாக நடிக்கவுள்ளதாகவும், மலையாள நடிகர் ரோஷன் மாத்தியூ வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க  திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News