நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘பராசக்தி’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து, ‘டான்’ படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் பணியாற்றுகிறார் என சொல்லப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீ லீலாவை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சிவகார்த்திகேயனின் தற்போதைய ‘பராசக்தி’ திரைப்படத்திலும் ஸ்ரீ லீலா நடித்துவருகிறார். இதன் மூலம், இருவரும் தொடர்ந்து இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.