வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தி கோட்’. இந்த படம் விமர்சன ரீதியாக கலந்த விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில் வெற்றியை பதிவு செய்தது. இதனைத்தொடர்ந்து வெங்கட்பிரபு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்னைகளினால் அந்த படம் தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. தற்போது, வரும் நவம்பர் மாதத்திற்கு சிவகார்த்திகேயன் தனது கால்ஷீட்டை ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வெங்கட் பிரபு முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த புதிய திரைப்படமும் டைம் டிராவலை மையமாகக் கொண்டு உருவாகும் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் எனவும் இந்த படத்தில் இரண்டு நாயகிகள் இடம்பெறுகின்றனர் எனவும் கூறப்படுகிறது.
அதாவது கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் கயாடு லோகர் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இதில் கல்யாணி, ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கிய ‘மாநாடு’ மற்றும் சிவகார்த்திகேயனுடன் நடித்த ‘ஹீரோ’ படங்களில் நடித்த அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.