இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘தி கோட்’ . இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கவுள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகளை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் மிருணாள் தாகூர் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது கல்யாணி பிரியதர்ஷனை கதாநாயகியாக இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ‘மாநாடு’ படத்தில் நடித்திருந்தார். அதேபோல் சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’ படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

