எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துத் 2015ஆம் ஆண்டு வெளியான படம் ‘பாகுபலி’ ஆகும். இதில் அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், ராணா டகுபதி, நாசர், சத்யராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையை எம்.எம். கீரவானி வழங்கினார். படம் வெளியானதும் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று, ரூ.1800 கோடிக்கும் மேல் வசூல் செய்த பெரும் வெற்றியை பெற்றது.
இதையடுத்து, 2017ஆம் ஆண்டு ‘பாகுபலி 2’ வெளியாகியது. இந்த இரண்டு பாகங்களும் பெரும் வரவேற்பை பெற்று, இந்திய சினிமாவை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றன.
இப்போது, ‘பாகுபலி’ திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் மீண்டும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த தகவலை படத் தயாரிப்பு நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ரீ-ரிலீஸ் வரும் அக்டோபர் 23ஆம் தேதி, நடிகர் பிரபாஸின் பிறந்த நாளில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.