Wednesday, September 25, 2024

நான் சிங்கிள்… என்னை டபுள் ஆக்க வேண்டாம்… ஐஸ்வர்யா லக்ஷ்மி ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாளத்தில் வெளிவந்த மாயநதி படத்தின் மூலம் புகழைப் பெற்ற நடிகை ஐஸ்வர்ய லட்சுமி, தமிழில் கட்டா குஸ்தி மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி, தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை நிலைநாட்டியுள்ளார். மலையாளத்திலும் தொடர்ந்து நடித்து வரும் அவர், தற்போது ஹலோ மம்மி என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பும், தனது டப்பிங் பணிகளையும் முடித்துள்ளார். 

ஓய்வு நேரங்களில், ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் உரையாடி அவர்களது கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பழக்கம் கொண்டவர் ஐஸ்வர்ய லட்சுமி. சமீபத்தில் நடந்த ஒரு உரையாடலில், ஒரு ரசிகர் அவரிடம், “நீங்கள் ஏதாவது ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்களா?என்று நேரடியாகக் கேட்டார்.

அதற்கு சாமர்த்தியமாக பதிலளித்த ஐஸ்வர்யா, “இது போன்ற கேள்வியைத்தான் பலரும் கேட்கிறீர்கள். நான் மகிழ்ச்சியான சிங்கிளாக இருக்கிறேன். எனவே தயவுசெய்து என்னை டபுள் ஆக்க முயற்சிக்க வேண்டாம் எனற சிரித்தபடி கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News