Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

நான் அவரின் பக்கம் சென்றால், அவர் எழுந்து நின்று, எனக்கு ஒரு நாற்காலி வரும்வரை நின்றுகொண்டிருப்பார்‌… ரஜினிகாந்த் குறித்து நெகிழ்ந்த துஷாரா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையான் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான ப்ரோமோஷன்கள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், துஷாரா விஜயன் சமீபத்தில் ஒரு பேட்டியில், நடிகர் ரஜினிகாந்தின் எளிமை குறித்து பேசியுள்ளார்.

“ரஜினி சார் செட்டில் இருப்பதால், அந்த இடமே அமைதியாக இருக்கும். படக்குழுவினர், நாங்கள் அனைவரும் அவரை தூரமாக இருந்து பார்த்துக் கொண்டிருப்போம்,” என்று துஷாரா கூறியுள்ளார். வேலை இல்லாத நேரங்களில் கூட, ரஜினியின் உதவியாளர்கள் அவ்வப்போது அவரைச் சந்திக்க செட்டிற்கு வந்துவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில், தமது முதல் சந்திப்பிலேயே ரஜினிகாந்த் அவரைப்பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும், துஷாரா விஜயன், “நான் அவரின் பக்கம் சென்றால், அவர் எழுந்து நின்று, எனக்காக ஒரு நாற்காலி வரும்வரை நின்றுகொண்டிருப்பார்,” என்றும், ரஜினிகாந்த், இசை வெளியீட்டில் தன்னைப் பற்றி பேசியது அவருக்கு ஆச்சரியமாக இருந்ததாக கூறினார்.

- Advertisement -

Read more

Local News