கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகுந்த வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய நடிகர் அசோக் செல்வன், “இந்த மாதிரி படம் பண்றதுக்குக் காரணம் மணி சார், கமல் சார் ரஹ்மான் சார், சிம்பு சார்னு எல்லோரும்தான். நான் இவங்களோட படங்கள்தான் பார்த்து வளர்ந்திருக்கேன். என்னுடைய நேர்காணல்கள்ல கண்டிப்பாக கமல் சார் பற்றி பேசிடுவேன். இந்தப் படத்தோட படப்பிடிப்பு எனக்கு மாயையாவே போயிடுச்சு.
அதனால மணி சார் இன்னொரு படம் கொடுங்க. எனக்கு இது பெரிய வாய்ப்பு. இவங்க எப்படி வேலைகளை கவனிக்குறாங்கன்னு நான் பார்த்துக்கிட்டே இருந்தேன். நான் சிம்பு சாருடைய மிகப்பெரிய ரசிகன். நான் ஸ்கூல் படிக்கும்போது வல்லவன் ஷூட் நடந்தது. அப்போ அவரைப் பார்க்கப் போன பலர்ல நானும் ஒருத்தன். போர்ட் கார்ல பயங்கர ஸ்டைலாக வருவாரு. ‘ஓ மை கடவுளே’ படம் பார்த்துட்டு சிம்பு சார் என்னைக் கூப்பிட்டு பேசினார்.” என நெகிழ்ச்சியுடன் அசோக்செல்வன் பேசினார்.