சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தில் நடித்ததாகக் கூறப்பட்ட தீபிகா படுகோனே, அந்தத் திட்டத்தில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகின. அவருக்குப் பதிலாக திரிப்தி டிம்ரி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டதுடன், அந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், ‘ஸ்பிரிட்’ படத்தின் கதை வெளியானது தொடர்பாக, தீபிகாவின் பெயரைச் சுட்டிக் காட்டாமல், “டர்ட்டி பி.ஆர். கேம்ஸ்” என சந்தீப் ரெட்டி வங்கா எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவின் அடிப்படையில், அவர் இந்த விமர்சனங்களை தீபிகா மற்றும் அவரது பி.ஆர் குழுவினரைக் குறித்தே தெரிவித்திருக்கலாம் என பரபரப்பான செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் தீபிகா படுகோனே தெரிவித்ததாவது, “உண்மையாகவும், நம்பத்தக்கதாகவும் இருப்பது தான் என்னை நிதானமான மனநிலையில் வைத்திருக்கிறது என எனக்குத் தோன்றுகிறது. சிக்கலான சூழ்நிலைகள் அல்லது கடினமான நேரங்களில் நான் எப்போதும் என் உள்ளுணர்வுகளை நம்பி முடிவெடுப்பேன். ஒரு முடிவில் உறுதியாக இருப்பது எனக்கு அதிகமான அமைதியைக் கொடுக்கும், அதுவே எனது மனநிலையை சமமாக வைத்திருக்கிறது என நான் உணர்கிறேன்” என்று கூறினார்.