Tuesday, October 15, 2024

சீக்கிரம் வெற்றிமாறன் சார்கிட்ட கதை ஒண்ணு கேட்க போறேன்… வெற்றிமாறனோடு இணைவதை உறுதிப்படுத்திய நடிகர் ஜெயம்ரவி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதை சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போதைய விவாகரத்து சர்ச்சைக்கு இடையே, ஜெயம் ரவி தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த தீபாவளிக்கு ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள “பிரதர்” படம் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து, “டாடா” இயக்குநர் கணேஷ் பாபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும், “ஜீனி” மற்றும் “காதலிக்க நேரமில்லை” போன்ற படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன. இதைத் தொடர்ந்து, ஹிந்தி மொழியில் நடிக்கவும் சில இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் வெற்றிமாறனை ஜெயம் ரவி அண்மையில் சந்தித்து பேசியதாக கூறியுள்ளார்.

அதாவது இயக்குனர் வெற்றிமாறன், தான் தொடர்ச்சியாக இவ்வளவு படங்கள் இயக்க வேண்டியது இருக்கிறது, இதனை முடித்துவிட்டு கண்டிப்பாக பண்ணலாம் என ஜெயம் ரவியிடம் கூறியதாகவும், அதுமட்டுமன்றி தன்னிடம் கதையொன்று உள்ளது, அதை விரைவில் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார் வெற்றிமாறன் என பகிர்ந்துள்ளார் நடிகர் ஜெயம்ரவி.

- Advertisement -

Read more

Local News