Touring Talkies
100% Cinema

Friday, March 21, 2025

Touring Talkies

‘ட்ராமா’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விவேக் பிரசன்னா மற்றும் சாந்தினி தமிழரசன் தம்பதிக்கு குழந்தை இல்லாததால் மன வேதனையில் உள்ளனர். இந்த நிலையை சமாளிக்க அவர்களது நண்பரான ஆனந்த் நாக் அவர்களுக்கு உதவிகரம் நீட்டுகிறார். அதேபோல், ஆட்டோ டிரைவராக இருக்கும் மாரிமுத்து மற்றும் அவரது மனைவியான ரமா தம்பதியின் மகளாக பூர்ணிமா ரவி பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார். பூர்ணிமாவை பார்த்தோஷ் காதலிக்கிறார். மற்றொரு பக்கத்தில் கார் மெக்கானிக்காக உள்ள ஈஸ்வர், தனது நண்பர்களின் உதவியுடன் கார் திருடி விற்று வருகிறார். மேலும், பிரதீப் கே. விஜயன் குழந்தை இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை நடத்துகிறார். இவ்வாறு நான்கு விதமான பாத்திரங்கள், ஒரு பொதுவான பிரச்சனையில் ஒன்றாகி சந்திக்கின்றன. அந்த பிரச்சனை என்ன? மருத்துவம் எவ்வாறு அதனுடன் தொடர்புடையது என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.

மருத்துவத் துறையை மையமாகக் கொண்டு ஹைபர் லிங்க் சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் குழந்தையின்மைக்கான சிகிச்சை என்ற பெயரில் நடைபெறும் மோசடிகளை அடிப்படையாக கொண்டு, அந்த மோசடிகள் எவ்வளவு ஆழமாக உள்ளன என்பதையும், அதன் உச்சகட்டத்தை எளிமையாகவும் வலிமையாகவும் இவர் படம் மூலம் சொல்லியுள்ளார். முக்கியமாக, ஒரு குழந்தைக்காக பல லட்சங்களை செலவழிக்கும் வகையில் முயற்சி செய்வதைவிட, பெற்றோர் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளை தத்தெடுத்து பராமரிக்கலாம் என்ற உணர்வூட்டும் செய்தியையும் இப்படம் முன்வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் மைய கதாபாத்திரமாக நடித்துள்ள விவேக் பிரசன்னா வழக்கம்போல நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார். அவரது மனைவியாக நடித்துள்ள சாந்தினி தமிழரசன், தாய்மையினைப் பெற விரும்பும் பெண் மனதை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல், பூர்ணிமா ரவி மற்றும் பார்த்தோஷ் இருவரது நடிப்பும் பாராட்டப்படத்தக்கது. குறிப்பாக, பார்த்தோஷின் கேரக்டர் செம்ம டூரிஸ்ட் மாதிரியான ஸ்டைலில் இருக்கிறது. நண்பனாக வருகிற ஆனந்த் நாக், தன்னுடைய மற்றொரு முகத்தினை காட்டி ரசிகர்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.

மாரிமுத்து மற்றும் ராமா ஆகியோர் நடுத்தர குடும்பத்தை பிரதிநிதிப்பதுபோல் செம்மையாக நடித்துள்ளனர். அதேபோல், இன்ஸ்பெக்டராக வரும் சஞ்சீவ், கான்ஸ்டபிளாக வரும் வையாபுரி, முதல் அமைச்சராக வரும் நிழல் ரவி உள்ளிட்ட அனைவரும் தங்களது கதாப்பாத்திரங்களை உணர்ந்து நன்கு நடித்துள்ளனர்.படத்தின் ஒளிப்பதிவில் அஜித் சீனிவாசன் பெரிதும் பங்களித்துள்ளார். ஆர்எஸ் ராஜ பிரதாப் இசை ரசிகர்களுக்கு சுகமாக அனுபவிக்கும்படியாக அமைந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News