ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிறகு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, நடிகர் மகேஷ் பாபுவை முன்னிலைப்படுத்தி தனது புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் காசியின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட தொன்மக் கதையாக உருவாகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஒடிஷாவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த நிலையில், இந்தப் படத்தில் நடிகர் மாதவன் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நடிகர் பிருத்விராஜ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.