ரஜினி, ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போதைக்கு, படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன, வேட்டையன் திரைப்படம் படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்குப் பிறகு, அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்திலும் நடித்து வருகிறார், இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. ‘

வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (செப்., 20) மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக ரஜினி விமானம் மூலம் சென்னை வந்தார்.விமான நிலையத்தில் செய்தியாளர்கள் வேட்டையன் படம் குறித்து கேட்டனர். அதற்கு ரஜினிகாந்த் வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது. ‘கூலி’ படப்பிடிப்பு சிறப்பாக நடந்து வருகிறது என அவர் கூறினார்.

அதன்பின், அரசியல் தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் கேட்கத் தொடங்கியதும், ரஜினி சிறிது பதட்டமாக, “அரசியல் குறித்து என்னிடம் கேள்விகளை கேட்காதீர்கள் என நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்,” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.