ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு ‛வாரணாசி’ என்று டைட்டில் வைத்திருப்பதாக நேற்று அறிவித்துள்ளார்கள். இந்த படத்தில் மகேஷ்பாபு உடன் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சமீபகாலமாக ஹாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வரும் பிரியங்கா சோப்ரா பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்திய படத்தில் நடிக்கிறார்.இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் ஆக்சன் கதாபாத்திரத்துக்காக ஹாலிவுட் படங்களில் நடிக்க தான் வாங்குவது போன்று 30 கோடி சம்பளம் பிரியங்கா சோப்ரா வாங்கி இருப்பதாக டோலிவுட் வட்டார தகவல் தெரிவிக்கிறது.


