வட சென்னை 2, வாடி வாசல், சிம்புவுடன் புதிய படம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் ஒரு வீடியோவில் முழுமையாக விளக்கம் அளித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது, கடந்த சில நாட்களாக என்னைப் பற்றியும், வட சென்னை படத் தொடரையும், தனுஷ் பற்றியும் யூடியூப் மற்றும் பிற ஊடகங்களில் பல வதந்திகள் பரவி வருகிறது. சிலர் கடுமையான சொற்களால் விமர்சனம் செய்ததால், நேரடியாக விளக்கம் தரவேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது உருவாகும் எனது அடுத்த படத்தை எஸ். தாணு தயாரிக்கிறார். இதில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். ஆனால் இது வட சென்னை 2 அல்ல. ஆனால், இந்தப் படம் வட சென்னை பின்னணியில் உருவாகும். எனவே, வட சென்னை படத்தில் வந்த சில கதாபாத்திரங்கள் மற்றும் சூழ்நிலைகள் இதில் இடம்பெறலாம்.
அதேசமயம், ‘வட சென்னை 2’ என்றால் அது தனுஷ் நடித்ததுவாகத்தான் இருக்க வேண்டும். அன்பு என்ற கதாபாத்திரத்தை எழுச்சியாகக் கொண்டு செல்ல தனுஷ் மட்டுமே முடியும். மேலும், வட சென்னை படத்தின் உரிமை தனுஷுக்கே உள்ளது. எனவே, அடுத்த பாகம் எடுக்கவேண்டும் என்றால் அவரிடமே உரிமம் பெற வேண்டும்.வாடிவாசல் படத்துக்கான பணிகள் நிறைவடையவில்லை என்பதால், அந்தப் படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில்தான் தாணு, சிம்புவுடன் பேசுங்கள் என்றார். அதன்படி, அவரிடம் உரையாடி தற்போது இந்த புதிய படத்தின் பணிகளை ஆரம்பித்துள்ளேன்.
தனுஷுடன் எனக்கு எந்த மனவருத்தமும் இல்லை. வட சென்னை விஷயத்தில் சிறிதும் கருத்து வேறுபாடு இல்லை. இது குறித்து தனுஷிடம் பேசினபோது, “நீங்கள் கிரியேட்டராக உங்கள் விருப்பப்படி செய்யலாம். என்னுடைய டீம் யாரும் பேசலாமா, பணம் வேண்டாம், ஒப்புதல் தருகிறேன்” என சொல்லியுள்ளார்.வட சென்னை படத்தை தனுஷே தயாரித்ததால் காப்புரிமை அவரிடம் இருக்கிறது. அதனால் அவர் மற்றவர்கள் எடுக்கும் பாகத்துக்கு பணம் கேட்பது சரியானதே. இதையும் நான் புரிந்துகொள்கிறேன்.
மேலும், “சிம்புவுடன் நீங்கள் பணியாற்றினால் படம் நல்லதாக இருக்கும், சிம்புவுக்கும் புதிய அனுபவமாக இருக்கும்” என்று தனுஷ் உற்சாகம் தெரிவித்தார்.
நான் எதிர்கொள்வோர பல பொருளாதார பிரச்னைகளில் தனுஷ் எனக்கு உதவியுள்ளார். சமீபத்திலுமே உதவியுள்ளார். அவருக்கும் எனக்கும் எந்த வகையிலும் பிரச்சனை இல்லை.
சிம்புவுடன் பேசியபோது, “வட சென்னை குறித்து பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. என்னுடைய மற்றும் தனுஷின் நட்பில் சிக்கல் ஏற்படாதவாறு படம் உருவாக வேண்டும். நீங்கள் சொல்ற கதையில் நான் நடிக்க தயார். எனக்குத் தனுஷ் தொடர்பாக எந்த பிரச்சனையும் இல்லை” என்று சிம்பு சொல்லியுள்ளார்.இதன் மூலம், கடந்த சில வாரங்களாக நிலவி வந்த வட சென்னை படத்தொடர்பான பிரச்னைகளுக்கு ஒரு தெளிவான முடிவு கிடைத்திருக்கிறது.