Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

என்.ஜி.கே படத்தில் நான் தொடர்ந்து நடிக்க காரணம் தனுஷ் சார் தான்… நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரேமம் படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை சாய் பல்லவி கடந்த 10 ஆண்டுகளில் அந்த புகழால் ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்றிருக்கலாம். ஆனால் அவர், தன்னால் விரும்பப்படும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, குறைந்த எண்ணிக்கையிலேயே படங்களில் நடிக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான, ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் ராணுவ அதிகாரியின் மனைவியாக நடித்துள்ளார். இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் பாராட்டுகின்றனர்.

இந்த சமயம் சமீபத்திய பேட்டியில் சாய் பல்லவி, என்ஜிகே படத்தில் இருந்து விலக நினைத்த அனுபவம் மற்றும் அதில் தனுஷ் தலையிட்ட காரணத்தைப் பற்றிப் பேசினார். அவர் கூறியதாவது, “செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தின் தொடக்க காலங்களில் எனக்கு கடினமாக இருந்தது. செல்வா சார் காட்சிகளை படமாக்கியதும், நான் நன்றாக நடித்தேன் என்ற கருத்து அல்லது வழிகாட்டுதல் எதுவும் அவர் தரமாட்டார். இதனால் சில நாட்களில் படத்தை விட்டு வெளியேறலாமா என்று கூட யோசித்தேன்.

அப்போது, என்ஜிகே படப்பிடிப்பு எப்படிக் நடக்கிறது என்று தனுஷ் சார் என்னை கேட்டபோது, என்னுடைய கவலையை அவரிடம் பகிர்ந்தேன். அதற்கு அவர், ‘இதற்கெல்லாம் வருத்தப்பட வேண்டாம்; செல்வா அண்ணன் நம்மைப் படத்தின் தரத்துக்காக இப்படி டெஸ்ட் செய்வார். நீ கவலைப்படாமல் செய்க,’ என்று கூறினார். அதன்பின், பாசிட்டிவ் மனப்பாங்குடன் அந்த படத்தில் நடிக்கத் தொடங்கினேன். நடிகர் சூர்யாவும் எனக்கு பெரும் ஆதரவாக இருந்தார், என்று சாய் பல்லவி பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

Read more

Local News