தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த அனுஷ்கா, ‘பாகுபலி’ படத்தின் மூலம் பெரிய திருப்புமுனையை அடைந்தார். இதன் பிறகு அவர் நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஏழு வருடங்களில் அவர் பாகமதி, சைலன்ஸ், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி ஆகிய மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக உடல் எடையைக் கூட்டியதற்குப் பிறகு, அதைப் பழைய நிலைக்கு கொண்டு வர அவர் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 2018ல் ஜி.அசோக் இயக்கத்தில் வெளியான பாகமதி படத்தின் 2வது பாகம் விரைவில் உருவாக உள்ளது. இதை இயக்குனர் அசோக் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தில் அனுஷ்காவே முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இதேபோல், முதல் பாகத்தை விட இதில் அனுஷ்காவின் கதாபாத்திரம் இன்னும் வலுவாக இருக்கும் என்றும், 2025ல் படப்பிடிப்பு துவங்கும் என்றும் அசோக் கூறியுள்ளார். தற்போது அனுஷ்கா தெலுங்கு படமான காட்டி மற்றும் தனது முதல் மலையாள படமான காத்தனார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவற்றை முடித்த பிறகு, பாகமதி 2 படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.