நடிகை நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இந்து மதத்தின் மீது ஆழமான பற்றுதல் கொண்டவர். தொடர்ந்து பல்வேறு இந்து கோவில்களுக்கு சென்று வழிபடும் பழக்கத்தை தொடர்ந்து கொண்டு வருகிறார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகும், நயன்தாரா தன்னை ஒரு இந்துவாகவே வெளிப்படுத்தி வருகிறார். அதேசமயம், தேவாலயங்களுக்கும் அவ்வப்போது செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், சில தினங்களுக்கு முன்னர் பாரிஸில் அமைந்துள்ள சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு பழமையான தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அந்த தேவாலயத்தின் முன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவை 30 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளன.