ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பாலா பீடத்தில் நேற்று பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

அங்கு பாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி அவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்ததுடன், அவர் எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாலா கவச நூலை பரிசளித்தார். தொடர்ந்து குருஜி பாபாஜி தாம் எழுதிய அன்னை பாலா நூலை சிவகார்த்திகேயனுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பாலா பீட நிர்வாகி மோகன்ஜி அன்னை பாலாவுக்கு தீபாராதனை நடத்தினார். பாலா பீட செயலாளர் முரளிதரன், வந்திருந்த அனைத்து பாலா பக்தர்களையும் வரவேற்றார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.