தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருபவர் நாகார்ஜுனா. தற்போது ஜூன் 20ம் தேதி திரைக்கு வரவுள்ள ‘குபேரா’ திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான தனது டப்பிங் பணிகளை அவர் சமீபத்தில் முடித்துள்ளார்.
அவரது மகன் அகில் அக்கினேனியின் திருமணம் நேற்றைய தினம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. மேலும், ஜூன் 8ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இப்படிப்பட்ட முக்கிய நிகழ்வுகளுக்கிடையிலும், தனது பணி பற்றி கவலைப்பட்டு, ‘குபேரா’ படத்திற்கான டப்பிங் பணியை நேரத்திற்கு முன்னதாகவே முடித்து வைத்துள்ளார். திரையுலகில் பல சீனியர் நடிகர்கள் தங்களுக்கேற்பட்ட வேலைகளை நேர்மையாக செய்து முடிப்பது வழக்கம்தான். நாற்பது வருடங்களாக திரையுலகில் உள்ள நாகார்ஜுனாவின் இந்த தொழில் நெறிப்பற்று சிறப்பாக பாராட்டப்பட வேண்டியது.
‘குபேரா’ படத்திற்கு பிறகு, ‘கூலி’ எனும் மற்றொரு படத்திலும் அவர் நடித்துள்ளார். 1980களின் இறுதியில் நாகார்ஜுனா நடித்த ‘இதயத்தைத் திருடாதே’, ‘உதயம்’ போன்ற டப்பிங் படங்கள் அந்த கால இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. அதேபோல இந்த ஆண்டு, அவர் நடிப்பில் நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.