1990-ம் ஆண்டு நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான “நரி நரி நடுமா முராரி” திரைப்படம், அவரது கெரியரில் மறக்கமுடியாத படமாக உள்ளது. தற்போது ‘எங்கேயும் எப்போதும்’ பட நடிகர் ஷர்வானந்தின் 37வது திரைப்படத்திற்கு இதே பெயர் ‘நரி நரி நடுமா முராரி’ என வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த முதல் தோற்ற போஸ்டரை நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் ராம் சரண் வெளியிட்டனர். அனில் சுங்கராவின் ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ராமபிரம்மம் சுங்கரா தயாரிக்க, இப்படத்தை ‘சமாஜவரகமனா’ புகழ் ராம் அப்பாராஜு இயக்குகிறார்.

இப்படத்தில் சம்யுக்தா மற்றும் சாக்சி வைத்யா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.