உதயநிதியின் மகன் இன்பநிதியை கதாநாயகனாக வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில், ‘பைசன்’ படம் வெளியான பிறகு தனுஷை வைத்து அடுத்த படத்தை தொடங்குவதாகவும், அதன்பின் இன்பநிதி மற்றும் கார்த்தியை வைத்து படங்கள் எடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் இன்பநிதி திரைத்துறைக்கு வருவது உறுதியாகி உள்ளது

மேலும், மாரி செல்வராஜ் பேசுகையில், ஒரு படத்தில் கமிட்டாகும்போது முதலில் கதையை கதாநாயகனிடம் சொல்ல வேண்டும். கமிட்டாகிவிட்டு பின்னர் கதையை யோசிக்கலாம் என இருக்கக்கூடாது. கமிட்டாகிவிட்டு பின்னர் கதாநாயகன் கதையை பிடிக்கவில்லை என்றால் அது அவருக்கும் நமக்கும் சிரமமாக இருக்கும்.
உதயநிதி கடைசியாக நடித்த ‘மாமன்னன்’ படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ் தான். இன்பநிதியின் முதல் படத்தை அவரே இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.