ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 5ஆம் தேதி வெளியான படம் மதராஸி. சிவகார்த்திகேயன் – ருக்மணி வசந்த் இணைந்து நடித்துள்ள இந்த படம் இதுவரை ரூ.70 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் வெற்றிக்காக பழனி முருகனிடம் வேண்டுதல் வைத்திருந்த முருகதாஸ், படம் திரைக்கு வந்ததும் பழனி கோவிலில் சென்று முடி காணிக்கை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியபோது, “அஜித் நடித்த எனது முதல் படமான தீனாவுக்கு பிறகு, மதராஸி படத்தை இயக்கும் போது தான் பழனி முருகனிடம் வேண்டுதல் வைத்தேன். தீனா படத்துக்கு பிறகு நான் மொட்டை போடவில்லை. ஆனாலும் பழனி கோவிலுக்கு சென்று வந்தேன். மதராஸிக்கு பிறகு தான் தலையில் மொட்டை போட்டேன். காரணம், இந்த படமும் எனக்கு முதல் படம் போலவே தோன்றியது” என்று கூறியுள்ளார் முருகதாஸ்.
முருகதாஸ் கடைசியாக தமிழில் இயக்கிய தர்பார் (2020) படம் தோல்வியடைந்தது. அதன் பின் சல்மான் கான் நடித்த ஹிந்தி படம் சிக்கந்தர் கடந்த மாதங்களில் வெளிவந்து தோல்வியடைந்தது. இப்படியான நிலையில், மதராஸி படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியில் வெற்றியை பெற்றதால் முருகதாஸ் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.