தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

இந்த படம் ஹிந்தித் திணிப்பை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சிவகார்த்திகேயன் ஒரு கல்லூரி மாணவனாக நடிக்கிறார். சமீபத்தில் இலங்கையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பராசக்தி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று பொள்ளாச்சியில் தொடங்கவிருக்கிறது என்று கூறப்படுகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் ‘மதராஸி’ திரைப்படத்தில் நடிக்க வேண்டிய சில காட்சிகள் நடித்து முடித்துவிட்டு தற்போது மீண்டும் பராசக்தி படக்குழுவுடன் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன் என்று தகவல் வெளியாகியுள்ளது.