நடிகர் கார்த்தி தற்போது ‘சர்தார் 2’, ‘வா வாத்தியார்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரையரங்குகளில் வெளியிட உள்ளன. இவற்றுக்குப் பிறகு, ‘டாணாக்காரன்’ படத்தை இயக்கிய தமிழின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் கார்த்தியின் 29வது திரைப்படமாக உருவாகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்தின் கதை 1960களில் ராமேஸ்வரம் பகுதிக்குள் நடைபெறும் கடல் கொள்ளையர்களைப் பற்றிய பின்னணியில் அமைகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் காரைக்கால் மற்றும் ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் அந்த பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது இப்படத்தின் பூஜை விழா ஜூலை 10ஆம் தேதி சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.