தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகராக உள்ள சிரஞ்சீவி, தற்போது தனது 157வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் அனில் ரவிபுடி இயக்குகிறார். இந்தப் படத்தினை சைன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் ஒரு சிறப்புத் தோற்றமாக, நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிக்க உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் அனில் ரவிபுடி வெங்கடேஷை வைத்து கடைசியாக இயக்கிய ‘சங்கராந்திக்கி வஸ்துனா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து, வெங்கடேஷ், இந்தப் படத்திலும் கேமியோ ரோலில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என தெலுங்குத் திரைப்பட வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.