நடிகர் சிவகார்த்திகேயன் ‘அமரன்’ திரைப்படத்திற்கு பிறகு, தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் ‘மதராஸி’ மற்றும் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இதில், ‘மதராஸி’ படத்தில் அவரது இணையாக ருக்மணி வசந்த், பிஜூ மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் திரில்லர் வகை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தில், ‘காக்கிச்சட்டை’ திரைப்படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் மீண்டும் ஒரு போலீஸ் வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘மதராஸி’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 23 கோடிக்கு பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.