நடிகர் அதர்வா நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான படம் தான் “டி.என்.ஏ.”. இந்த படத்திற்கு பிறகு, அதர்வா தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் “பராசக்தி” படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர்களுடன் ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்கள்.

இந்த நிலையில், “பராசக்தி” திரைப்படம் குறித்த சில சுவாரசியமான தகவல்களை அதர்வா பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: “பராசக்தி ஸ்கிரிப்டை நான் முதலில் படித்தவுடன் மிகவும் பிடித்தது. இது நல்ல ஒரு படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. தற்போது வரை 50 முதல் 60 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.
இதுவரை எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகள் அனைத்தும் நன்றாகவே வந்திருக்கின்றன. ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து எப்படியெல்லாம் ரியாக்ட் செய்வார்கள் என்பதை காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். ஸ்ரீலீலாவை பற்றி பேசப்படும்வரை, அவர் இதற்கு முன் நடித்த தெலுங்குப் படங்களைவிட, இங்கு ஒரு நடிகையாக அவருடைய திறமையை மிகத் தெளிவாக காட்டுகிறார் என்று அவர் கூறினார்.