நடிகை தீபிகா படுகோனே, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தில் இருந்து விலகியதற்கான காரணங்களைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியானது. அதன் படி, தீபிகா படுகோனே தனது குழந்தையை கவனிக்க வேண்டிய தேவையினால், ஒரு நாளுக்கு 8 மணி நேரம் தான் பணியாற்ற முடியும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்தார். இந்த வேலை நேரம் குறித்த பேச்சுவார்த்தைகள், தீபிகா எதிர்பார்த்தபடி செல்லாததால், அவர் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் பேட்டி ஒன்றில், மணிரத்னத்திடம், “தீபிகா படுகோனே தனது வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என கோருவது சரியா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம், அது ஒரு நியாயமான கோரிக்கையே என்று நான் நினைக்கிறேன். அந்த மாதிரியான கோரிக்கையை முன்வைக்கும் நிலைக்கு அவர் வந்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. ஒரு திரைப்பட இயக்குநராக, இப்படிப்பட்ட கோரிக்கைகளை கவனிக்க வேண்டும் என்பதே என் எண்ணம். தீபிகா கேட்டது நியாயத்திற்கு மாறானது அல்ல.
தீபிகாவின் இந்த கோரிக்கை, அதே சூழ்நிலையில் உள்ள பல பெண்களுக்கு ஒரு புதிய வாயிலாக அமையும். இது அவர்களுக்கு அடிப்படைத் தேவையாகும், அதுதான் அவர்களது முன்னுரிமையாக இருக்க வேண்டும். இது குறித்து நாம் புரிந்துகொண்டு, அதை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.