தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில், தனது 50-வது படமான ‘காதி’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் அனுஷ்கா ஷெட்டி. இதில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் போதைப்பொருள் கடத்தலை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் ஏப்ரல் 18ம் தேதி வெளியாகும் என படக்குழு ஆரம்பத்தில் அறிவித்திருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த தேதியில் வெளியாகவில்லை. இந்த நிலையில், அனுஷ்கா மற்றும் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘காதி’ திரைப்படம் ஜூலை 11ம் தேதி வெளியாகும் என தற்போது படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.