‘தக் லைப்’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் மணிரத்னம் குறுகிய காலத்துக்குள் குறைந்த பட்ஜெட்டில் ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி நடிக்கிறார். மேலும், இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு தமிழ் நடிகரும் இடம்பெற உள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகின்றது.

தற்போது, இந்தப் படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் ‘அலைபாயுதே’, ‘ஓகே கண்மணி’ போன்ற காதல் திரைப்படங்கள் பாணியில் உருவாகிறது என கூறப்படுகிறது.
ருக்மணி வசந்த் தற்போது தமிழ் திரையுலகில் விஜய் சேதுபதியுடன் ‘ஏஸ்’ படத்தில் நடித்து அறிமுகமாகிறார். அதேபோல், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் ‘மதராஸி’ என்ற படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாகவும் நடித்து வருகிறார். தெலுங்கு மொழியில் ‘டிராகன்’ உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.