தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் மிகுந்த வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. மேலும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அவரது 23-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘மதராஸி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது.

தற்போது, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘பராசக்தி’ எனும் புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதற்கிடையில், அவரது அடுத்த திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்கவுள்ளார் என்றும், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த புதிய திரைப்படம் தந்தை மற்றும் மகன் இடையிலான உறவை மையமாகக் கொண்டு உருவாகும் கதையாம். இதில் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நட்சத்திரமான மோகன்லாலுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.