தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ என்ற திரைப்படத்தில் நடித்ததை முடித்துள்ளார். இதன் பின்னர், சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு சிங்கத்தையும், ஒரு புலியையும் தத்தெடுத்துள்ளார்.
குறிப்பாக, ஸ்ரேயர் எனப்படும் சிங்கத்தையும், யுகா எனப்படும் புலியையும் தத்தெடுத்து, அடுத்த மூன்று மாதங்களுக்கு அவற்றின் பராமரிப்பு மற்றும் சுகாதாரச் செலவுகளை பொறுப்பேற்றுள்ளார். இந்த தகவலை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.