அஜித்குமார், திரிஷா மற்றும் பலர் நடித்த ‘குட் பேட் அக்லி’ என்ற படம் கடந்த வாரம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியானது. இப்படம் தமிழகத்தில் மட்டும் 5 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

கடந்த 5 நாட்களில் இந்தப் படம் உலகம் முழுவதும் 170 கோடி ரூபாயைத் தாண்டியிருக்க வாய்ப்பு உள்ளது என இன்று காலை தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பது ஒரு முழுமையான சாதனையாகும்.
இதற்கு முன்பு அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படம் 3 நாட்களில் 100 கோடி வசூலித்தது. ‘நேர் கொண்ட பார்வை’ படம் 6 நாட்களில் 100 கோடி வசூலித்தது. தற்போது ‘குட் பேட் அக்லி’ மிக விரைவில் 100 கோடி வசூலித்த அஜித் படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்திருந்தாலும், வசூல் ரீதியாக இப்படம் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது என்பதுதான் திரையுலகத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.