Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கிளைமாக்ஸில் எனக்கு இருந்த குழப்பம்… அலைபாயுதே குறித்து மனம் திறந்த‌ மணிரத்னம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் மற்றும் ஷாலினி நடித்த ‛அலைபாயுதே’ திரைப்படம், இன்றும் ரசிகர்களிடையே பிரபலமாக பேசப்படுகிறது. காரணம் மணிரத்னம் செய்த அந்த திரைக்கதை மேஜிக்.சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட மணிரத்னம், ‛அலைபாயுதே’ படத்தின் உருவாக்கத்துக்கான ஒரு ரகசியத்தை பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறுகையில், “நான் ‛அலைபாயுதே’ படத்தை முதலில் ஷாருக்கான் மற்றும் கஜோலை வைத்து இயக்க திட்டமிட்டேன். ஷாருக்கானும் இந்தக் கதைக்கு ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால், அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் எப்படி அமைய வேண்டும் என்பதில் குழப்பமாக இருந்தது. இதனால், நான் ‛அலைபாயுதே’யை விட்டு, ‛தில் சே’ படத்தை இயக்கினேன்.

‛தில் சே’ படத்தை முடித்த பிறகே, ‛அலைபாயுதே’ கதையில் என்ன தேவை என்பதை தெளிவாக உணர்ந்தேன்” என்றார். மேலும், 2002ம் ஆண்டு ‛அலைபாயுதே’ படம் ஹிந்தியில் ‛சாத்தியா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதனை ஷாட் அலி இயக்க, விவேக் ஓபராய் மற்றும் ராணி முகர்ஜி நடித்திருந்தனர்.

- Advertisement -

Read more

Local News