Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

அல்லு அர்ஜூனுடன் கைக்கோர்கிறாரா இயக்குனர் நெல்சன் திலீப்குமார்? அல்லு அர்ஜூன் கொடுத்த கிரீன் சிக்னல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பஹத் பாசில் நடித்துள்ள புஷ்பா-2 படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதை முன்னிட்டு படக்குழு பல முக்கிய நகரங்களில் சென்று புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். இதன் ஒருபகுதியாக, நேற்று சென்னையில் புஷ்பா-2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் நெல்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது பேசுகையில், அவர், “நான் ஒரு முறை அல்லு அர்ஜுனை சந்தித்து கதை சொல்ல சென்றேன். ஆனால் எனக்கு தெலுங்கு தெரியாததால், அவரிடம் எப்படி கதை சொல்ல போகிறேன் என்று தயங்கினேன். ஆனால் அவர் அழகாக தமிழில் பேசினார். அப்போது அவர் நேரடியாக தமிழ் படத்தில் நடிக்கலாமே என்று தோன்றியது,” எனத் தெரிவித்தார்.

பாட்னா நகரத்தில் அல்லு அர்ஜுனுக்கான நிகழ்ச்சியில் பெரும் மக்கள் கூட்டம் ஏற்பட்டது. இதனால், இனி அவர் தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நேரடியாக நடிக்க வேண்டும் என நெல்சன் கோரிக்கை வைத்தார். அதைக் கேட்ட அல்லு அர்ஜுன், அதை ஏற்றுக் கொண்டதுபோல் தலை அசைத்தார்.மேலும், அல்லு அர்ஜுனை வைத்து நீங்கள் எப்போது படம் இயக்குவீர்கள்? என தொகுப்பாளர்கள் நெல்சனிடம் கேட்டபோது, “அதற்கான முடிவு அல்லு அர்ஜுனிடமே இருக்கிறது,” என்று பதிலளித்தார். அதற்குப் பதிலாக அல்லு அர்ஜுன், “நான் ஒப்புக் கொள்கிறேன்,” என காட்டிவிரலால் சம்மதம் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News