Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள ‘எனை சுடும் பனி’ திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விழித்திரு, என் காதலி சீன் போடுறா, வாகை ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்த நட்ராஜ் சுந்தர்ராஜ், ‘எனை சுடும் பனி’ என்ற புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடித்துள்ளார். இவர்களுடன் பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா, தலைவாசல் விஜய், முத்துக்காளை, சிங்கம் புலி, தானீஷ், சுந்தர்ராஜ், பில்லி முரளி ஆகியோர் நடித்துள்ளனர். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், இப்படத்துக்கு இசையமைத்துள்ளார் அருள்தேவ்.

பொள்ளாச்சி பகுதியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மையமாகக் கொண்டு பல படங்கள் உருவாகியுள்ள நிலையில், இந்தப் படம் அதன் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை இயக்கிய ராம் ஷேவா, படத்தின் கதையை விளக்கும்போது கூறியதாவது,கதாநாயகன் ஜாலியாக வாழும் இளைஞன். ஐபிஎஸ் அதிகாரி தேர்வுக்காகத் தயாராகி வருகிறார். இந்த சூழலில் பொள்ளாச்சியில் பெண்கள் தொடர்ந்து காணாமல் போகிறார்கள். ஒரு பெண்ணின் சடலம் சாலையோரத்தில் கண்டெடுக்கப்படுகிறது. அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் நீதி கேட்டு போராட, போலீசாரும் தீவிரமாக விசாரிக்கின்றனர்.பின்னர் எப்படி நீதி கிடைக்கிறது என்பதே படத்தின் கதையாம்.கதையின் மையத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் எதிர்பாராத விதமாக விசாரணை வளையத்துக்குள் சிக்குகின்றனர். பின்னர் விசாரணை தொடங்கியதும் என்ன நடக்கிறது என்பதே கதையின் சுருக்கமாகும். இது சைக்கோ கிரைம் திரில்லர் வகை படமாக தயாரிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

- Advertisement -

Read more

Local News