Saturday, October 19, 2024

யாரும் எதிர்பாராத நடிகரை பிச்சைக்காரராக நடிக்க வைக்க நினைத்தேன்… ப்ளடி பெக்கர் இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில், நடிகர் கவின் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘பிளடி பெக்கர்’. சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ள இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 31-ம் தேதி வெளியாக உள்ளது. ஜென் மார்டின் இசையமைப்பில், சுஜிதா சாரங்க் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்தில், ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ், அக்‌ஷயா ஹரிஹரன், அனார்கலி நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தைப் பற்றிக் கூறிய இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார், “நெல்சனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். தனியாக படம் இயக்க முயன்றபோது, அவரிடம் சில ஐடியாக்களை கேட்டேன். அந்தக் கதையை கேட்டதும், நானே தயாரிக்கிறேன் என்றார். இப்படம் ஒரு பிச்சைக்காரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை. அவர் எப்படி அந்த நிலைக்கு வந்தார், பின்னர் அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை படம் பேசுகிறது. இதில், டார்க் காமெடியும் இருக்கும், ஆனால் இது முழுக்க முழுக்க காமெடி படம் இல்லை. முதலில் வேறு சில நடிகர்களை மனதில் வைத்து கதையை எழுதியிருந்தேன்.

கதை எழுதிவிட்டு, யாரும் எதிர்பாராத ஒரு நடிகரை பிச்சைக்காரராக நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன். அப்படித்தான் கவினிடம் பேசினேன். அவர் கதையை கேட்டுவிட்டு, நடிப்பதாகச் சொன்னார். இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடி இல்லை. அக்‌ஷயா ஹரிஹரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிச்சைக்காரருக்குப் பிறகு, இன்னொரு கேரக்டரில் கவினுக்கும் ஒரு புதிய தோற்றம் இருக்கும்,” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News